Posts

Showing posts from October 2, 2019

இந்தியத் தலைமகன் காந்தி மகான்

Image
பொன்னுருக்கு எழில் வானம் பூத்திருக்கும் தென்புலத்துத் தேன் தென்றல் தாலாட்டும்! வெண்ணிறத்து பனிமகுடம் இமயம் சூடும் கண்ணுறங்க கடல் அலைகள் கவிதைபாடும் இன்முகத்து எழில் அன்னை பாரதத்தின் பொன் வயிற்று நன்மகன்தான் புனித காந்தி! நன்னெறியும் நாணயமும் நல்வாழ்வும் பொன் பொருளும் புகழ் சிறப்பும் நல்லறிவும் இந்நிலத்தின் பெருமை என உலகறிய இங்கிலாந்து கள்வருக்கோ வயிற்றெரிவு! மானமுயர் பாரதத்தை அடிமை கொண்டு மக்களெலாம் மாடுகள் போல் வாழவைத்தார். வழக்காடி பொருளீட்ட வந்த காந்தி  வாழ்வியலை மாற்றியதே இனவெறி தான் இனவெறியன் அன்றொருநாள் உதைத்த உதை, இந்தியரின் சுதந்திரத்தின் விதைதான் போலும்! தம்மக்கள் நலம் பேணும் நோக்கம்விட்டு- காந்தி தாய் நாட்டின் தாழ்வுதனை போக்க வந்தார் எந்நாளும் வாய்மையே வெல்லும் என்று உண்ணா நோன்பிருந்து உரக்கச் சொன்னார். துணிந்து எதிர்த்த வீரர் எல்லாம் துப்பாக்கி குண்டுகளை ஏந்தி வீழ வெற்றுடம்பு காந்தி மகான் முன்னே, சிற்றெறும்பாய் பரங்கியர்கள் தோற்று நின்றார் உத்தமர் காந்தியின் உண்ணா நோன்பு, உலகப் போர் முறை காணாத ஒன்று! மேலாடை துறந்த இந்திய தந்தைக்க...