Posts

Showing posts from August, 2019

அத்திவரதர்

Image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு அதிசய நிகழ்வாக அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு நிகழ்திருக்கிறது. வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் திருக்குள நீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டும் வழிபடப்பட்டு மீண்டும் திருக்குள நீரில் மூழ்கிவைக்கப்படும் அதிசயம் இப்போது நம் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த அத்திவரதர் அத்திமரத்தால் வடிக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நூற்றாண்டு கடந்த வைபவம் பிரதமர், ஜனாதிபதி தொடங்கி அனைத்து மாநிலத்தவரையும் ஈர்த்து குறுகிய காலத்தில் பெரும் கவனம் பெற்றது நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அற்புத நிகழ்வே! இதற்குமுன் 1854, 1892, 1937, 1979 ம் ஆண்டுகளில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடந்திருக்கிறது. இந்த ஆண்டும் 1-7-2019 முதல் 17-8-2019 வரை நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது. ஆத்திவரதர் என்னை ஆட்கொண்டு தனது நிறைவு நாளில் ஒரு பாமாலை சூட்ட என் உள்ளத்தில் பணித்ததால் இக்கவிதையை சிரமேற்கொண்டு எழுதிபரவசமுற்றேன். கலியுக வரதனே காஞ்சியின் வரதனோ! தடாகம் பூத்தெழுந்த தாமரை மணாளனோ! வராது வந்த மாமணியே...

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்

Image
ஆரியகுலத்தின் மேவிய செல்வன் நேரிய வழியினன் நேர்மைக் குசேலன் காரியவண்ணன் கருணை வள்ளல் பாரின் வேந்தன் கண்ணனின் நண்பன் சீரிய நட்பின் ஓவிய இலக்கணம் பாரினில் வாழ்ந்திட இருவரும் வாழ்ந்தனர் பாரினை விளக்கும் பகலவன் குலத்தின் பண்பிற் சிறந்த பெரியோர் வாழிடம் தோழர் இருவரும் தொழுதே கற்று நேசக் கரங்களை நெருக்கிப் பிடித்தனர் காலக் குதிரையோ கடிதாய் விரைந்தது கல்விக் கடலின் கரைதனைக் கண்டனர். கருவிழியழவும் கைகள் நெகிழவும் இருவர் மனத்திலும் ஏக்கப் பிரிவுகள் ஆண்டுகள் கடந்ததும் மாண்டன நினைவுகள் அருமைக் கண்ணனோ ஆயர் தம் வேந்தன்! அந்தணன் குசேலனோ நொந்தனன் வாழ்வை ஓட்டைக் குடிசையும் மனைவியும் மக்களும் ஏக்க மனத்தினன் போக்கிடம் அறிந்திலன் கண்ணனைக் கண்டு கனிந்திட எண்ணினான் பொன்னொளி நிகர்த்த புவியின் வேந்தன் வெள்ளைச் சிரிப்பில் முல்லையை வென்றவன் வானவர் வாழ்த்திட வாழும் கண்ணனின் துவாரகா புரிக்கு வந்தான் குசேலன் நோக்கும் இடமெலாம் தேக்கும் வாழையும் வானையும் எட்டும் வைக்கோற் குவியல்கள் அன்புக் கண்ணனின் அரண்மனை தொட்டிட எண்ணி எண்ணி நகர்த்தினான் கால்களை வாயிற் கா...