Posts

Showing posts from September 29, 2019

தூண்டிலிடும் உன்விழிகள்

Image
நெற்கதிரின் குனிவை கண்டேன் நின் முகத்தில் நாணம் கண்டேன்! விற்போரில் வீரம் கொண்டேன் விழிவீச்சில் தூரம் நின்றேன்! முத்துக்கள் மாலை என்றேன் முல்லையவள் சிரிக்கக் கண்டேன்! கிள்ளை குயில் மொழிகள் என்றேன் கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்! அன்னம் நடைபயில ஆசை கொண்டேன் அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்! நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும் நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்! மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்! வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன் பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்! புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன் உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்! செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன் செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்! தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன் தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!

மருந்தாளும் வேந்தர் தினம் 25th September

Image
பிணி நீக்கும் பணி ஏற்றோம் வினை தீர்க்கும் வித்தை கற்றோம் நஞ்சையும் அமிழ்தாக்கி நலம் செய்தோம் உயிர்காக்கும் மருத்துவரின் உற்றதுணை நாமானோம். முப்பொழுதும் திறந்திருக்கும் மருந்தகமும் நமதே! மருந்துச்சீட்டு தலையெழுத்தின் விடையறிவோம் நாமே! மருத்துவர்கள் அறியாத  கிராமத்து வைத்தியரும் நாமே! மருந்துசெய் கெடுவிளைவை புரிந்துசொல்லும் பிரம்மா நாமே! எப்போதும் மக்கள்பணி இறைபணியாய் முன்நிற்கும் மனிதகுலம் காக்கும் புனித குலம் நமதன்றோ!