Posts

Showing posts from September 28, 2019

தமிழ்த் தாய் வாழ்த்து

Image
பொதிகை மலை உகுத்த பொன்னுருக்கு எழிலருவி; வைகை வாழ் நாட்டில் வளர்ந்திட்ட இளங்குமரி; குள்ள மா முனிவன் குடில் பெற்ற அருட்செல்வி; குடகுமலைக் காவிரியில் குதித்தாடும் பைங்குமரி; செம்மையுரை வள்ளுவரின் செந்நாக்கு பேசும் மொழி; வள்ளல் கடையெழுவர் வாழ்வித்த உயிர் மூச்சு; தொட்டில் இளங் குழந்தை துயிலூட்டும் தாலாட்டு; நளினக் காற்சதங்கை நடைமாற்றும் இசைக்கூத்து; எழிலொழுக ஒவியத்தில் எழுதுவித்த குயிற்பாட்டு; நாற்று நடும் உழத்தியரின் நாவளைத்த இசைப்பாட்டு; குதித்தோடும் காவிரியின் குற்றாலக் குளிர்சாரல்; திகட்டாத நறும்பூக்கள் தேடிவந்த தேன்தென்றல்; பகட்டாக வானெழுந்த பல்வண்ணப் பட்டாம்பூச்சி; ஔவை மூதரசி அணிந்திருந்த பொன்மகுடம்; பாட்டரசன் பாரதி மீட்டுவித்த நல்வீணை; கட்டுத் தறி கூட கனிவாய் பேசும் கவிதை; தமிழ்- மெல்லியல்பில் இளங்குமுதம் மேன்மையிலே நல்லமுதம் உயர்சிறப்பில் பனி இமயம்- உயர்வுக்கு உயிரே ஈந்தாலும் தகும்!