Posts

Showing posts from March, 2020

கொரோனா- இதுவும் மாறும் நிலை வரும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி  இப்போது இந்தியாவில் ஆயிரம் பேருக்கு பரவி வீடுகளில் அனைவரும் அடைபட்டுக் கிடக்கும் நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை மண்ணில் இந்த மனிதனே மன்னன் என்ற நினைப்பு தான் மண்ணைக் கவ்வும் நிலைமையும் எண்ணிப் பார்த்த தில்லையே! கண்ணில் காணா கொரோனா கனவில் வந்து கொல்லுதே வானம்பாடி வாழ்க்கையோ வாசல் கதவில் முட்டுதே வாசம் நுகர்ந்த நாசியை விஷமாய் வைரஸ் நெருங்குதே! அனைத்தும் அறிந்த மனிதனை அறியாமல் பற்றித் தொடருதே ! கைகளைத் தொட்ட நண்பன் கழுத்தைப் பற்றும் காலனாம்! இருமலில் பரவும் நோய்தான் இதுவரை வந்ததில் கொடியதாம் அரசனும் ஆண்டியும் இன்று அடைபட்டுக் கிடக்கிறார் நொந்து அகந்தையில் அழித்தது கொஞ்சமா? அடக்கி ஆளுதே கொரோனா! முகத்தை மூடி ஒளிகையில் முதுகுக்குப் பின்னால் சிரிக்குதே! காலம் கடத்தாது அடங்குக! கதவுகள் அடைத்து முடங்குக! அடைபட்டு வாழ்வது ஒன்றே தடைபட்டு பரவுதல் நிறுத்தும் இருப்பதை வைத்து வாழவும்; இன்பம் எதுவென உ...

கொரோனா ஒழியும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை கொரோனா ஒழியும் மனிதா! கொள்ளைநோய் நமக்கு புதிதா? மரணத்தை வெல்வோம் எழுந்துவா மாற்றம் காணட்டும் இந்தியா! இருமலும் தும்மலும் கேடு உடனே முகத்தை மூடு இருகரம் கூப்பி வணங்கு இடையிடை கைகளைக் கழுவு பொதுவில் இருமினால் பரவும் பொறுப்புடன் தூய்மையைப் பேணு குடிப்பதால் ஒழியாது கொரோனா குசும்புக்கு இதுதான் நேரமா? முகத்தில் கவசம் மாட்டு அகத்தில் துணிவே மருந்து! காய்ச்சலும் இருமலும் இருந்தால் அலட்சியம் செய்யாதே நண்பா! மருத்துவ மனைதனில் அடங்கு தெருக்களில் திரியாமல் முடங்கு. பொதுநலம் ஒன்றே மருந்து தனிநபர் ஒழுங்கே தீர்வு ! பொதுவில் உமிழ்தல் தவறு போதும் தவறை உணரு! பலரும் தொட்ட பொருளில் பலநாள் வாழுமாம் கிருமி! கண்ணும் மூக்கும் வாயும் கைகளால் தொடுவதால் நோயாம் ! மனிதனை மாய்க்கும் எதிரி கண்ணுக்கு தெரியாத கிருமி! எத்தனை வந்தால் என்ன ஏழாம் அறிவால் வெல்வோம்!