Posts

Showing posts from 2020

தத்துவ வடிவே வினாயகா

Image
ஆனை வடிவில் ஆழ்ந்தநல் தெளிவும் பானை வயிற்றில் பயின்ற பொறுமையும் கூரிய விழிகளில் குவிந்த மனமும் அகன்ற செவியில் அனைத்து அறிவும் ஒற்றைக் கொம்புபோல் ஏற்றதைத் தேர்ந்து நீண்ட துதிக்கையில் வேண்டிய சுற்றமும் அங்குசக் கரங்கள் ஐம்புலம் அடக்கவும் அடங்கிய எலிபோல் ஆசைகள் ஒடுங்கவும் அபயக் கரங்கள் அடைக்கலம் தந்திட தேன்சுவை மோதகம் தேடிய வரமாய் வானவர் வாழ்த்தி வையகம் வாழ கழல்கள் பற்றி தொழுதவர் துணைவரும் அழகிய களிறே! அற்புதத் திருவே! எளியவர் இறையே! என்றும்என் துணையே! கற்பகத் தருவே! பொற்பதம் பணிந்தேன்!

சுதந்திரம் நமக்கு நிரந்தரம்

Image
 விடிகாலைப் பொழுது இங்கு விடிவெள்ளி முளைத் தெழுந்து இனிதாகக் குயில் இசையில் இழைந்தோடி தென்றல் வர இதுவரையில் இருந்த இருள் இனி இங்கு நிலைபெறுமோ?! தொடுவானம் சிவந் தெழுந்து துளிர்க்கிறதே புதுக் கனவு இனி ஒருநாளும் துன்பமில்லை ஒழிந்திடுமே சூழும் தொல்லை துயில் களைந்து எழுமனமே! துணிவே நம் துணைவருமே! அன்று பிறந்த சுதந்திரம் என்றும் நமக்கு நிரந்தரமே! பிறநாட்டு பொருள் எதற்கு? திறம் வளர்த்து உருவாக்கு உழுது உண்ணும் விவசாயம் தொழுது உயர்த்தும் வழிதேடு தடம்மாறும் இளைஞர் கூட்டம் தரம் உயர்த்தி வேலைகொடு மதமாயப் பூசல் எல்லாம் மனிதர்க்கு வேண்டாம், கேடு! இந்தியக் கல்வித் தரமே இனி உலகின் தரமென்றாக்கு பாரதப் புதல்வரே இனி பாரின் வேந்தர் என்றாக்கு. துயில் களைந்து எழுமனமே! துணிவே நம் துணைவருமே! அன்று பிறந்த சுதந்திரம் என்றும் நமக்கு நிரந்தரமே!

கொரோனா- இதுவும் மாறும் நிலை வரும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி  இப்போது இந்தியாவில் ஆயிரம் பேருக்கு பரவி வீடுகளில் அனைவரும் அடைபட்டுக் கிடக்கும் நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை மண்ணில் இந்த மனிதனே மன்னன் என்ற நினைப்பு தான் மண்ணைக் கவ்வும் நிலைமையும் எண்ணிப் பார்த்த தில்லையே! கண்ணில் காணா கொரோனா கனவில் வந்து கொல்லுதே வானம்பாடி வாழ்க்கையோ வாசல் கதவில் முட்டுதே வாசம் நுகர்ந்த நாசியை விஷமாய் வைரஸ் நெருங்குதே! அனைத்தும் அறிந்த மனிதனை அறியாமல் பற்றித் தொடருதே ! கைகளைத் தொட்ட நண்பன் கழுத்தைப் பற்றும் காலனாம்! இருமலில் பரவும் நோய்தான் இதுவரை வந்ததில் கொடியதாம் அரசனும் ஆண்டியும் இன்று அடைபட்டுக் கிடக்கிறார் நொந்து அகந்தையில் அழித்தது கொஞ்சமா? அடக்கி ஆளுதே கொரோனா! முகத்தை மூடி ஒளிகையில் முதுகுக்குப் பின்னால் சிரிக்குதே! காலம் கடத்தாது அடங்குக! கதவுகள் அடைத்து முடங்குக! அடைபட்டு வாழ்வது ஒன்றே தடைபட்டு பரவுதல் நிறுத்தும் இருப்பதை வைத்து வாழவும்; இன்பம் எதுவென உ...

கொரோனா ஒழியும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை கொரோனா ஒழியும் மனிதா! கொள்ளைநோய் நமக்கு புதிதா? மரணத்தை வெல்வோம் எழுந்துவா மாற்றம் காணட்டும் இந்தியா! இருமலும் தும்மலும் கேடு உடனே முகத்தை மூடு இருகரம் கூப்பி வணங்கு இடையிடை கைகளைக் கழுவு பொதுவில் இருமினால் பரவும் பொறுப்புடன் தூய்மையைப் பேணு குடிப்பதால் ஒழியாது கொரோனா குசும்புக்கு இதுதான் நேரமா? முகத்தில் கவசம் மாட்டு அகத்தில் துணிவே மருந்து! காய்ச்சலும் இருமலும் இருந்தால் அலட்சியம் செய்யாதே நண்பா! மருத்துவ மனைதனில் அடங்கு தெருக்களில் திரியாமல் முடங்கு. பொதுநலம் ஒன்றே மருந்து தனிநபர் ஒழுங்கே தீர்வு ! பொதுவில் உமிழ்தல் தவறு போதும் தவறை உணரு! பலரும் தொட்ட பொருளில் பலநாள் வாழுமாம் கிருமி! கண்ணும் மூக்கும் வாயும் கைகளால் தொடுவதால் நோயாம் ! மனிதனை மாய்க்கும் எதிரி கண்ணுக்கு தெரியாத கிருமி! எத்தனை வந்தால் என்ன ஏழாம் அறிவால் வெல்வோம்!

தஞ்சை கோயில் குடமுழுக்கு விழா 2020

Image
The ‘kumbhabhishekam’ (consecration) of the 1,010-year-old Thanjavur Sri Brihadeeswarar Temple or the Big Temple, built by emperor Rajaraja Chola I (985 CE -1015 CE)  on tomorrow 5-2-2020. அடியார் மனத்தகத்து எழுந்த ஒளிச்சுடர்  மாணிக்கக்  கதிரே! முடிமேல் குளிர் கங்கைசூடி முடியும்அடியும் முடிவிலா வடிவே! அனைத்திலும் உயிராய் உறைந்து  நினைத்ததும் வந்த நிறைவே! வினைத்துயர் தீர்க்க வந்த விடிவெள்ளி யன்ன விளக்கே! இறைத்தமிழ் மணக்கும் தஞ்சை இராஜராஜ சோழீச்வரச் சுடரே! இருகரம் கூப்பும் அடியார் இதயத் துயர்தீர் மருந்தே! பெருவுடையார் எனப் போற்றிப் பெருமைகொள் தமிழர் மரபே! இமயச் சிகரம் தொட்டுயரும் நமச்சிவாய நாதத் திருவே! குன்றென உயர்ந்த நின்கோயில் குடமுழுக்கில் குளிரும் அடியார் எழில்மனமே! கோ. பார்த்தசாரதி