தத்துவ வடிவே வினாயகா
ஆனை வடிவில் ஆழ்ந்தநல் தெளிவும் பானை வயிற்றில் பயின்ற பொறுமையும் கூரிய விழிகளில் குவிந்த மனமும் அகன்ற செவியில் அனைத்து அறிவும் ஒற்றைக் கொம்புபோல் ஏற்றதைத் தேர்ந்து நீண்ட துதிக்கையில் வேண்டிய சுற்றமும் அங்குசக் கரங்கள் ஐம்புலம் அடக்கவும் அடங்கிய எலிபோல் ஆசைகள் ஒடுங்கவும் அபயக் கரங்கள் அடைக்கலம் தந்திட தேன்சுவை மோதகம் தேடிய வரமாய் வானவர் வாழ்த்தி வையகம் வாழ கழல்கள் பற்றி தொழுதவர் துணைவரும் அழகிய களிறே! அற்புதத் திருவே! எளியவர் இறையே! என்றும்என் துணையே! கற்பகத் தருவே! பொற்பதம் பணிந்தேன்!