நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி

 



தேசிய மேல்நிலைப்பள்ளி- நான்
பூசிக்கும் கோயிலன்றோ?!

கல்விக் கண்திறந்த சான்றோர்
நல்லறம் நடத்திய மன்ற மன்றோ?!

காலம் தவறாமைக்குத்
தமிழாசான் விஸ்வநாதன்(TV)

தலைமைப் பண்புக்கு
தங்கநிகர் இராமசீனிவாசன்(HM Sir)

வேதியல் வித்தகர்
வேந்தர்நிகர் இராமசாமி(LR)

இயற்பியலின் தந்தை
இன்முகமாய் தியாகராஜன்(VT)

கணிதப் புலியன்றோ?!
கம்பீர விஜயராஜ்(RVR)

கலைஇலக்கியப் பேரொளி
கடமைதவறா பத்மா அம்மையார் 

அன்னை தமிழுக்கு அணிசேர்த்த
மாமன்னர் மீனவன்

கரைகாணா மாணவர்க்கு
கரம் கொடுத்த துவாரகைக் கண்ணன் (RTK)

சொந்தப் பிள்ளை போல
சொல்லிக் கொடுப்பாரே காந்திமதி தாயார்!

எண்ணிலடங்கா வேந்தர்கள்
எண்ணங்களில் சிம்மாசனமிட்ட

நன்நாகை நகர் பெற்ற
பொற்கோயில் அன்றோ எம்பள்ளி!

அந்நாளை நினைத்து ஏங்கி
அனுதினமும் தேடுகின்றேன்

நான்பெற்ற செல்வங்கள்
நல்லதொரு கல்விகாண!

கொட்டிக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை
கோவேந்தர் கொடுத்த கல்வி!

வையத்தில் வாழ்வுதந்த வேந்தே!
வணங்க வேண்டும் உம் கால்கள் எங்கே?!

கோ. பார்த்தசாரதி

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்