Posts

கொரோனா- இதுவும் மாறும் நிலை வரும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்தி  இப்போது இந்தியாவில் ஆயிரம் பேருக்கு பரவி வீடுகளில் அனைவரும் அடைபட்டுக் கிடக்கும் நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை மண்ணில் இந்த மனிதனே மன்னன் என்ற நினைப்பு தான் மண்ணைக் கவ்வும் நிலைமையும் எண்ணிப் பார்த்த தில்லையே! கண்ணில் காணா கொரோனா கனவில் வந்து கொல்லுதே வானம்பாடி வாழ்க்கையோ வாசல் கதவில் முட்டுதே வாசம் நுகர்ந்த நாசியை விஷமாய் வைரஸ் நெருங்குதே! அனைத்தும் அறிந்த மனிதனை அறியாமல் பற்றித் தொடருதே ! கைகளைத் தொட்ட நண்பன் கழுத்தைப் பற்றும் காலனாம்! இருமலில் பரவும் நோய்தான் இதுவரை வந்ததில் கொடியதாம் அரசனும் ஆண்டியும் இன்று அடைபட்டுக் கிடக்கிறார் நொந்து அகந்தையில் அழித்தது கொஞ்சமா? அடக்கி ஆளுதே கொரோனா! முகத்தை மூடி ஒளிகையில் முதுகுக்குப் பின்னால் சிரிக்குதே! காலம் கடத்தாது அடங்குக! கதவுகள் அடைத்து முடங்குக! அடைபட்டு வாழ்வது ஒன்றே தடைபட்டு பரவுதல் நிறுத்தும் இருப்பதை வைத்து வாழவும்; இன்பம் எதுவென உ...

கொரோனா ஒழியும்!

Image
COVID 19 NOVEL CORONA VIRUS நோய் சீனாவின் ஊஹான் மாநிலத்தில் பரவத் தொடங்கி பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று உலகெங்கும் பரவத் தொடங்கி உலகையே அச்சுறுத்திய நேரத்தில் எழுதப்பட்ட என் கவிதை கொரோனா ஒழியும் மனிதா! கொள்ளைநோய் நமக்கு புதிதா? மரணத்தை வெல்வோம் எழுந்துவா மாற்றம் காணட்டும் இந்தியா! இருமலும் தும்மலும் கேடு உடனே முகத்தை மூடு இருகரம் கூப்பி வணங்கு இடையிடை கைகளைக் கழுவு பொதுவில் இருமினால் பரவும் பொறுப்புடன் தூய்மையைப் பேணு குடிப்பதால் ஒழியாது கொரோனா குசும்புக்கு இதுதான் நேரமா? முகத்தில் கவசம் மாட்டு அகத்தில் துணிவே மருந்து! காய்ச்சலும் இருமலும் இருந்தால் அலட்சியம் செய்யாதே நண்பா! மருத்துவ மனைதனில் அடங்கு தெருக்களில் திரியாமல் முடங்கு. பொதுநலம் ஒன்றே மருந்து தனிநபர் ஒழுங்கே தீர்வு ! பொதுவில் உமிழ்தல் தவறு போதும் தவறை உணரு! பலரும் தொட்ட பொருளில் பலநாள் வாழுமாம் கிருமி! கண்ணும் மூக்கும் வாயும் கைகளால் தொடுவதால் நோயாம் ! மனிதனை மாய்க்கும் எதிரி கண்ணுக்கு தெரியாத கிருமி! எத்தனை வந்தால் என்ன ஏழாம் அறிவால் வெல்வோம்!

தஞ்சை கோயில் குடமுழுக்கு விழா 2020

Image
The ‘kumbhabhishekam’ (consecration) of the 1,010-year-old Thanjavur Sri Brihadeeswarar Temple or the Big Temple, built by emperor Rajaraja Chola I (985 CE -1015 CE)  on tomorrow 5-2-2020. அடியார் மனத்தகத்து எழுந்த ஒளிச்சுடர்  மாணிக்கக்  கதிரே! முடிமேல் குளிர் கங்கைசூடி முடியும்அடியும் முடிவிலா வடிவே! அனைத்திலும் உயிராய் உறைந்து  நினைத்ததும் வந்த நிறைவே! வினைத்துயர் தீர்க்க வந்த விடிவெள்ளி யன்ன விளக்கே! இறைத்தமிழ் மணக்கும் தஞ்சை இராஜராஜ சோழீச்வரச் சுடரே! இருகரம் கூப்பும் அடியார் இதயத் துயர்தீர் மருந்தே! பெருவுடையார் எனப் போற்றிப் பெருமைகொள் தமிழர் மரபே! இமயச் சிகரம் தொட்டுயரும் நமச்சிவாய நாதத் திருவே! குன்றென உயர்ந்த நின்கோயில் குடமுழுக்கில் குளிரும் அடியார் எழில்மனமே! கோ. பார்த்தசாரதி

சாய் குறள் மாலை

Image
1. சாய்நாமம் போற்றிப் புகழ்ந்து வணங்கியோர் நோயின்றி எய்துவர் நூறு. 2. சாய்பாதம் பற்றியோர் பெற்ற புகழனைத்தும் துய்யவாழ்வில் நிற்கும் துணை. 3. கருணைக் கரசராம் சாய்மகான் போற்றி பெருமை ஏற்கும் உலகு. 4. சாய்யின் வடிவம் அகத்தே பொதிந்தார்கு மாயை வெறுக்கும் மனது. 5. ஏழை வடிவத்து வள்ளல் வழங்குவார் ஏந்தும் கரங்களில் உய்வு. 6. நெஞ்சத்துத் தூயவர் சாய்மடி சேர்ந்தார்க்கு பஞ்சம் அகலுமே காண். 7. வெஞ்சினம் வென்றவர் சாய்வழி நின்றவர் நெஞ்சம் அடையும் உயர்வு. 8. வறியோர் பசியும் வருத்தும் பிணியும் நொடிக்குள் மறைத்தவர் சாய். 9. சாய்கழல் பற்றினார் சீரடி சேர்ந்தார்க்கு நோய்நொடி என்றும் இல. 10. வான்மழை ஓங்கி வளமை பெருக்குமே நான்மறை சாய்தொழும் நாடு. 11. சீரடி பெற்றசீர் சித்தராம் சாய்மகான் சீர்மிகு மானிடர் பேறு. 12. கார்முகில் வந்து கழனி சிறக்குமாம் சீர்வளர் சாய்நல் வரவு. 13. வாய்மை  எளிமை எளியோர்க் கருள்செயும் சாய்யருள் பூசனை நன்று. 14. சாய்முகம் காணவே ஏங்கும் அடியவர் தாய்முகம் கண்ட மகவு. 15. காணும் பொருளில் பலவுருத் தோற்றமாய்க் காட்சி தருபவர் சாய். 16. மாதவச...

பூங்கா வாழ்க்கை

Image
மரங்கள் அடர்ந்த சோலையில் மண்டிக் களிக்கும் மழலைகள்! விடுமுறை வந்ததால் வசந்தம், பாடங்கள் மறந்த பரவசம்! புல்மடி உறங்கும் பெரியோர்; புகலிடம் தேடும் முதியோர்; கவலைகள் மறந்த குடும்பம் கடமைகள் இருந்தும் கூடும்! பறவைகள் போலே யாவரும் பாடித் திரிவதே ஒருசுகம்! இருவர் மட்டுமே உலகில் இருப்பது போன்றோர் நினைப்பில் காதலர் நடத்திடும் குறும்போ கலைஎழில் நிழற்பட விருந்து! பொங்கும் அழகுப் பூவினம் பெங்களூர் தோட்டத்து இரத்தினம்! பரந்து, விரிந்து, மனம்போல் பசுமை விரிக்கும் மரங்கள்!- அவை பணிச்சுமை வளைத்த முதுகை பஞ்சணை ஏந்தும் தாய்தான்! இயற்கையின் மடியில் ஒன்றாய் இன்பமாய்க் கூடும் மாந்தரோ தொந்தியைக் குறைக்கவும் ஓடுவார்; நொந்ததை மறக்கவும் நாடுவார்; அடுக்கு மாடிக் கூட்டுக்குள் அடைபட்டு வெந்தவர் கூடுவார். செங்கதிர் வெயிலில் வாடியோர் சிந்தனை மறந்தே தூங்குவார். மந்திரப் புன்னகை இயற்கை-ஆம் மாறக்குமே இயந்திர வாழ்க்கை!

இந்தியத் தலைமகன் காந்தி மகான்

Image
பொன்னுருக்கு எழில் வானம் பூத்திருக்கும் தென்புலத்துத் தேன் தென்றல் தாலாட்டும்! வெண்ணிறத்து பனிமகுடம் இமயம் சூடும் கண்ணுறங்க கடல் அலைகள் கவிதைபாடும் இன்முகத்து எழில் அன்னை பாரதத்தின் பொன் வயிற்று நன்மகன்தான் புனித காந்தி! நன்னெறியும் நாணயமும் நல்வாழ்வும் பொன் பொருளும் புகழ் சிறப்பும் நல்லறிவும் இந்நிலத்தின் பெருமை என உலகறிய இங்கிலாந்து கள்வருக்கோ வயிற்றெரிவு! மானமுயர் பாரதத்தை அடிமை கொண்டு மக்களெலாம் மாடுகள் போல் வாழவைத்தார். வழக்காடி பொருளீட்ட வந்த காந்தி  வாழ்வியலை மாற்றியதே இனவெறி தான் இனவெறியன் அன்றொருநாள் உதைத்த உதை, இந்தியரின் சுதந்திரத்தின் விதைதான் போலும்! தம்மக்கள் நலம் பேணும் நோக்கம்விட்டு- காந்தி தாய் நாட்டின் தாழ்வுதனை போக்க வந்தார் எந்நாளும் வாய்மையே வெல்லும் என்று உண்ணா நோன்பிருந்து உரக்கச் சொன்னார். துணிந்து எதிர்த்த வீரர் எல்லாம் துப்பாக்கி குண்டுகளை ஏந்தி வீழ வெற்றுடம்பு காந்தி மகான் முன்னே, சிற்றெறும்பாய் பரங்கியர்கள் தோற்று நின்றார் உத்தமர் காந்தியின் உண்ணா நோன்பு, உலகப் போர் முறை காணாத ஒன்று! மேலாடை துறந்த இந்திய தந்தைக்க...

தூண்டிலிடும் உன்விழிகள்

Image
நெற்கதிரின் குனிவை கண்டேன் நின் முகத்தில் நாணம் கண்டேன்! விற்போரில் வீரம் கொண்டேன் விழிவீச்சில் தூரம் நின்றேன்! முத்துக்கள் மாலை என்றேன் முல்லையவள் சிரிக்கக் கண்டேன்! கிள்ளை குயில் மொழிகள் என்றேன் கீதைமொழி உன்னதென்று கிறங்கி நின்றேன்! அன்னம் நடைபயில ஆசை கொண்டேன் அடியொற்றும் நடை உனதா? ஆவல்கொண்டேன்! நாணயங்கள் சிதறுகின்ற ஓசைகேட்டும் நாணமகள் கைவளையள் ஓசையென்றேன்! மலர் வனத்தில் பூக்கள் எல்லாம் மலர்ச்சிகொள்ள மங்கையவள் சேலையென மயக்கம் கொண்டேன்! வண்ணநிலா வானெழுந்து மயக்கக்கண்டேன் பொன்மகளே உன்வதனப் பொலிவுகண்டேன்! புல்மடியில் பனித்துளிகள் பூக்கக் கண்டேன் உன்னிமையில் பூத்திருக்கும் வியர்வை கண்டேன்! செவ்வானம் கீழ்க்கடலில் புலரக்கண்டேன் செம்மலரே உன்சிவந்த முகமே கண்டன்! தூண்டிலிலே சிக்கிவிடும் மீன்கள் கண்டேன் தூண்டிலிடும் உன்விழியில் சிக்கிக்கொண்டேன்!