Posts

கார்கில் போர் 1999

Image
தேசப்பற்று உணர்ச்சிப் பெருக்காய் ஊற்றெடுத்த தருணம் ஒன்று எனது இளம் வயதில் சந்திக்க நேர்ந்ததென்றால் அது 1999ம் ஆண்டு மே மாதம் நிகழ்ந்த கார்கில் யுத்தம் தான். யாரும் எதிர்பாராத ஒரு கடுங்குளிர் காலத்தில் பாக்கிஸ்தான் படைகள் நமது கார்கில் குன்றுகளை ஆக்ரமித்து தாக்குதல் நடத்த துவங்கின.. அந்த சவாலை முறியடித்து மூன்று மாதப் போருக்குப் பிறகு நமது இந்தியப் படைகள் நமது கார்கில் எல்லையை மீட்டெடுத்தனர்.. அந்த வரலாற்று நிகழ்வு மறக்க முடியாத ஒன்று. பள்ளிகள் கல்லூரி மாணவர்கள் ஊர்வலம் நடத்தி பாக்கிஸ்தானுக்கு எதிராக முழக்கமிட்டதை பல இடங்களில் கண்டேன் ... எனது இளரத்தம் கொதித்து .. அப்போது நான் எழுதிய கவிதை இதோ கார்கில் போர் சகோதர பாசத்தில் சமாதானம் பேசினோம்? மதம் கொண்டு போனதால் மதிகெட்டு போனதோ? பஞ்சத்தில் செத்தும் பசியால் உழன்றும் வஞ்சிக்கும் எண்ணம் நெஞ்சில் பிறந்ததோ? பஞ்சென நினைத்துப் பனிமலை ஏறிவிட்டாய் ! துஞ்சும் புலியை தூசென நினைத்து விட்டாய் வெஞ்சினம் கொண்ட எம் வீரர்கள் உன்னை சுட்டுச் சாய்க்குமுன் விழுந்திடு கால்களில் எல்லை தாண்டி முள்ளை மிதித்து விட்டாய் எலிவளை விடுத்து புலிக்குகை ...

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

Image
சிறு வயதில் எனக்கு கவிதை எழுதிப் பழக ஆர்வம் மிகுந்த தருணம் நான் சில வரிகளை கிறுக்க முற்பட்டேன்.. தமிழாசிரியரான எனது அன்னையார் கவிதை எழுத சில அடிப்படையான விஷயங்களை எனக்கு எடுத்துக் கூறி எனக்கு வழி காட்டினார் .... எதுகை, மோனை , இயைபு மற்றும் சீர் போன்ற அடிப்படையோடு எழுதப்படும் மரபுக்கவிதைக்கு தனி மதிப்பு உண்டு என புரிய வைத்தார்... எனது ஆரம்ப கால கவிதைப் பயிற்சிக்கு கிடைத்த தலைப்பு தான் "நட்சத்திரங்கள்" இந்த என் சிறுவயது கவிதை சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் எனக்குள் இருக்கும் தமிழ் அறிவு வெளிப்பட ஒரு கருவியாக அமைந்தது ... அக் கவிதை இதோ ! முத்துப் பல் காட்டி நித்தம் அமுதூட்டி சித்தம் மெருகேற்றி சிந்தை ஒளி கூட்டி கத்தும் கடல் பார்த்து கண் சிமிட்டும் காரிகையே முத்துத் தாரகையே முழுமதியின் தோள்வரையே! வானதேவன் வாரியிறைத்த வைரச் சிதறல்கள் பட்டத்து ராணியின் தோட்டத்தில் உலவிடும் மின்மினிப் பூச்சிகள் உலா வரும் நிலாப் பெண்ணின் உதிர்ந்துவிட்ட கூந்தல் மலர்கள் அண்ணாந்து பார்த்தவர் -இது போல் ஆயிரம் கதை சொல்வார் உனைவைத்து.. நித்திலமாய் ஒளி வீசும் தாரகையே- இனி நீயும் ஒர் ப...

ஜல்லிக்கட்டு மெரினா புரட்சி

Image
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை உடைத்தெறிந்த மாபெரும் இளைஞர்புரட்சி சென்னை மெரினா கடற்கரையில் ஜனவரி 2017ல் நிகழ்ந்த ஒரு வரலாற்று நிகழ்வு... தமிழ் இளைஞர்கள் மிகவும் கண்ணியமாக ஜனநாயக நெறிகளோடு போராடி உலக மக்களின் கவனத்தையும் ஆட்சியாளர்களின் கவனத்தையும் ஈர்த்து வெற்றி கண்டார்கள். அந்த அகிம்சை வழி புரட்சியால் ஈர்க்கப்பட்டு .. அப்போது என்னால் எழுதி வெளியிடப்பட்ட கவிதை இது ! அரசியல் புழுதியின் அவலங்கள் போக்கி நீடு துயில் நீக்கப்பாடி வந்த நிலாக்கள்! ஆர்ப்பரிக்கும் அலைக்கடல்கள் அடங்கிப்போக சீறிப் பறக்கும் தலைக்கடல்கள் எம் சிங்கங்கள்! தறிகெட்டுப் போன அரசியல் நாடகங்களுக்கு முடிவுகட்டப் பிறந்த எம் புரட்சிதீபங்கள் ! தன்னெழுந்து போராடும் காளையரும் தங்கையரும் விண்ணுயர்ந்த தமிழ்மரபின் கண்ணியத்தின் வடிவங்கள் ! பொன்னெழுத்தில் வரலாறு போற்றும் - நம் புரட்சிப்போர் எண்ணத்திலும் உதிக்காது துரோகம் - அது வீழ்ந்தது பார் ! தமிழன் என்றோர் இனமுண்டு-தனியே நமக்கோர் குணமுண்டு தயந்து பணியும் நம்முள்ளே- தகிக்கும் எரிமலைக் குழம்புண்டு !

இயற்கை எழில் மங்களூர்

Image
ஒரு முறை பணி நிமித்தமாக மங்களூர் பயணித்த போது கண்டு வியந்த இயற்கை எழிலை வார்த்தைகளில் கோர்க்க முற்பட்டு எழுதியது தான் இந்த .. என் மனம் கவர்ந்த கவிதை .... கொண்டல்தவழ் மலை முகடு கொஞ்சும் எழில் காட்டாறு வண்டு உலவும் பூக்காடு வான் உதிர்க்கும் மழைமுத்து சில்லென்றே பரவும் தென்றல் சிலிர்த்து எழும் கிளை மரங்கள் ஆர்ப்பரிக்கும் மலை அருவி அழகு மிளிர் மலையரசி காதல் கொண்டு மரங்கள் இங்கே கருமேகம் தழுவும் விந்தை! நாணம் கொண்ட குமரி யன்றோ?! நனைந்து விழும் கொடியினங்கள் ! மாலை நேர கதிரொளியில் மலையருவி பொன் போல் வீழும். அச்சமுற்ற புள்ளினங்கள் அடைவதற்கு கூடு தேடும் ! செஞ்சேற்றில் திலகமிட்டு செவ்வந்தி மலர்கள் சூடி கொஞ்சும் எழில் பெண்டிர் போலே குதித்தோடும் சிறு நதிகள். மண்ணுலகின் சொர்க்கம் என்றால் மங்களூர் என்றே சொல்வேன்!

வனிதையர் உலகமோ!

Image
இது எனது பெங்களுர் வாழ்வின் மாறுபட்ட உணர்வு... இங்கு கண்ட பெண்ணியம் மாண்பு நான் வேறெங்கும் கண்டதில்லை.. அதன் வெளிப்பாடு தான் இக் கவிதை...   **வனிதையர் உலகம் ** கவின் மலர்த் தோட்டமோ?! புவிவந்த நிலாக் கூட்டமோ?! மாந்தளிர் வண்ணமோ?!- வருடும் தேன் தமிழ்த்தென்றலோ?! கனி இதழ் மொழிகளோ- இமயப் பனி யெனக் குளிருதே! இதுவோர் வனிதையர் உலகமோ?! - மதுரக் கனி தரும் சோலையோ?! இனியொரு அழகுதான்- உலகிலே இருக்குமோ சொல் இயற்கையே! பெங்களூர் பெண்கள்-அழகிலே மயங்குதே காளையர் கண்கள்! நிமிர்ந்து நோக்கும் விழிகளின் வீச்சிலும் இனிந்து உதிர்க்கும் பன்மொழிப் பேச்சிலும் புலவன் பாரதி கண்டகனவு புதுமைப் பெண்களாய் பூத்ததே இங்கு ! ஒளி திகழ் அறிவிலும் மதி முகப்பொலிவிலும் அணி நிறை நட்பிலும் பணி செயும் மாண்பிலும் மான் விழி வீச்சிலும்- இங்கு ஆண் குலம் தோற்றதே !தோற்றதே !

எங்கள் ஊர் பெங்களூர்

Image
பெங்களூர் வாழ் தமிழன் என்ற முறையில் இங்கே வாழ்ந்து கண்டுணர்ந்ததை கவிதையாய் கொட்டி என் மனக்குமுறலை வெளிப்படுத்திய கவிதை இது ..... எங்கள் ஊர் பெங்களூர்   பனிசூழ்ந்த காலையோ வருடும் பணிச்சூழல் கவலையோ நெருடும் ! பகட்டும் கூத்தும் பார்த்திட திகட்டுமோ?! பழகிடத் துணிந்தால் பணங்காசு கேட்குமே! சூழும் நட்புக்கு பஞ்சமே இல்லை சூழல் மாறினால் வஞ்சகம் மீறுமே எல்லை ! வீதிகள் தோறும் சோலைகள் உண்டு விதிகளை மீறும் காளைகள் உண்டு! மாடங்கள் யாவும் காதலர் கூடமே! கூடிடும் யாவரும் காதலர் அல்லவே ! பதவியும் வாழ்வும் உலகத் தரத்திலே! மதிகெட்டுப் போனால் கொளுத்துவார் துரத்தியே! மொழியும் நதியும் இரு கண் போன்றதே! வழியும் குருதியில் இந்தியம் இல்லையே! இனங்கள் பலவும் இணைந்ததோர் நகரம்! மனங்கள் மட்டும் இணையாத துயரம். வைஃபையும் நெட்டும் வான் எல்லாம் தவழும்.. கைப்பேசி மட்டுமே யாவரின் கவனம் ! முகநூல் நட்புக்கு முடிவுரை இல்லை அகமகிழ் நட்பு தான் அமைவதே இல்லை! தொலைந்த ஆடையும் களைந்த கூந்தலும், பெண்ணியம் போற்றலாம் கண்ணியம் போற்றுமோ? குடிகார நட்பும் கிரெடிட் கார்டு தேய்ப்பும் ஆணவம் போற்றலா...

புத்தாண்டு வாழ்த்து

Image
இனிய புத்தாண்டு பிறப்பன்று நண்பர்களுக்குப் பகிர்ந்திட எழுதிய வாழ்த்து மடல் இது... குழலோடும்  யாழோடும்... கொஞ்சும் மழலைப் பண்ணோடும் புகழோடும் பொருளோடும் பொங்கும் நல்லருளோடும்.. பாலோடும் தேனோடும் பாரெங்கும் தமிழுணர்வோடும்... உழவோடும் தொழிலொடும் உலகோர்முன் நிமிர்நெஞ்சோடும்... நீரோடும் காவிரியும் நீதியருள் நல்லரசும்... தாலாட்டும் தழிழன்னை நல்வயிற்று புதல்வர் நாம்.. தரணியெங்கும் தலைநிமிர்ந்து கோலோச்சும் நன்னாளாளும்... ................... மேன்மேலும் வளமை எல்லாம் வழங்கவரும் புத்தாண்டை வாசலெங்கும் கோலமிட்டு நேசமுடன் வரவேற்போம்....! அன்புடன்.. *கோ. பார்த்தசாரதி*