புத்தாண்டு வாழ்த்து

இனிய புத்தாண்டு பிறப்பன்று நண்பர்களுக்குப் பகிர்ந்திட எழுதிய வாழ்த்து மடல் இது...

குழலோடும்  யாழோடும்...
கொஞ்சும் மழலைப் பண்ணோடும்

புகழோடும் பொருளோடும்
பொங்கும் நல்லருளோடும்..

பாலோடும் தேனோடும்
பாரெங்கும் தமிழுணர்வோடும்...

உழவோடும் தொழிலொடும்
உலகோர்முன் நிமிர்நெஞ்சோடும்...

நீரோடும் காவிரியும் நீதியருள் நல்லரசும்...
தாலாட்டும் தழிழன்னை

நல்வயிற்று புதல்வர் நாம்..
தரணியெங்கும் தலைநிமிர்ந்து கோலோச்சும் நன்னாளாளும்...
................... மேன்மேலும்
வளமை எல்லாம் வழங்கவரும் புத்தாண்டை
வாசலெங்கும் கோலமிட்டு நேசமுடன் வரவேற்போம்....!

அன்புடன்..
*கோ. பார்த்தசாரதி*

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்