தமிழ்த் திருநாள் வாழ்த்து

இக்கவிதை ஒரு தமிழ் திருநாளன்று நண்பர்களுக்காக படைக்கப்பட்டது......

குலமுயரும்
நலமுயரும் - குவலயத்தில்
குன்றாது வளமுயரும்,

வானுயரும்
வாழ்வுயரும் - தமிழர் தம்
கோலுயரும் குடியுயரும்,

மண்டியிடா
மாண்புயரும்- மாநிலத்தில்
மானமிகு மொழியுயரும்,

சீறுயரும்
சிறப்புயரும்- சிந்தையிலே
சிங்கநிகர் நினைப்புயரும்,

நீருயரும்
நெல்லுயரும் - நெடிதுவளர்
தென்னைபனை மீண்டுயரும்,

இமயம்வரை
கொடியுயரும் - இணையம் எங்கும்
நம்மக்கள் நட்புயரும்,

பொங்கிவரும்
பொருளும்வரும்- இப்பொங்கல்முதல்
மங்காத வளமுயரும், 

பகலவன்போல் வாழ்வுயரும்
தாழ்வகலும் தரமுயரும் - தரணி போற்றும்
வரமருளும் தமிழ்த்திருநாள் வாழ்த்துக்கள்!"

நட்புடன்
கோ.பார்த்தசாரதி



Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்