வனிதையர் உலகமோ!

இது எனது பெங்களுர் வாழ்வின் மாறுபட்ட உணர்வு... இங்கு கண்ட பெண்ணியம் மாண்பு நான் வேறெங்கும் கண்டதில்லை.. அதன் வெளிப்பாடு தான் இக் கவிதை...



 
**வனிதையர் உலகம் **


கவின் மலர்த் தோட்டமோ?!
புவிவந்த நிலாக் கூட்டமோ?!

மாந்தளிர் வண்ணமோ?!- வருடும்
தேன் தமிழ்த்தென்றலோ?!

கனி இதழ் மொழிகளோ- இமயப்
பனி யெனக் குளிருதே!

இதுவோர் வனிதையர் உலகமோ?! - மதுரக்
கனி தரும் சோலையோ?!

இனியொரு அழகுதான்- உலகிலே
இருக்குமோ சொல் இயற்கையே!

பெங்களூர் பெண்கள்-அழகிலே
மயங்குதே காளையர் கண்கள்!

நிமிர்ந்து நோக்கும் விழிகளின் வீச்சிலும்
இனிந்து உதிர்க்கும் பன்மொழிப் பேச்சிலும்

புலவன் பாரதி கண்டகனவு
புதுமைப் பெண்களாய் பூத்ததே இங்கு !

ஒளி திகழ் அறிவிலும்
மதி முகப்பொலிவிலும்

அணி நிறை நட்பிலும்
பணி செயும் மாண்பிலும்

மான் விழி வீச்சிலும்- இங்கு
ஆண் குலம் தோற்றதே !தோற்றதே !

Comments

Popular posts from this blog

நட்சத்திரங்கள் - இது என் சிறுவயது முதல் கவிதை

தாமரையின் காதல்

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்