Posts

தலைவன் வந்தான்

Image
பூவிழித் தாரகை பூண்டது நித்திரை பூம்பொழில் சிலிர்த்து பூமணம் நிறைக்க நாழிகை நகர்கையில் நல்லதோர் கவிதை மெல்லிசை பின்வர மென்மையாய் இனித்தது ஏழிசைப் பெண்குயில் ஏக்கமாய்க் கூவிட வானெழும் சூரியன் வதனப் பார்வையில் கானகம் நிறைத்த காரிருள் நாயகி நளினச் சிரிப்புடன் நாணமாய் விலகினாள். குவளை பூத்த குளக்கரைப் படியினில் கவலை பூண்டு காதலி நானழ தேதமிழ்த் தலைவன் தேடினான் இல்லையோ? வருதல் உரைத்து மாறுதல் ஏனோ? முல்லைச் சிரிப்பின் முகவரி தொலைந்ததோ? கொவ்வை இதழ்கள் வெம்மை ஈந்ததோ? குழலும் யாழும் குரலினும் இனித்ததோ? கோலக் கருவிழி கொஞ்சுதல் கசந்ததோ? நிகழும் யாவும் நினைவினில் இல்லையோ? ஏனோ தலைவன் என்திசை வந்திலன்? நெஞ்சம் நஞ்சென  நெருடும் வேளையில் வேங்கைப் பாய்ச்சலில் வெண்ணிறப் புரவியில் செந்நிறச் சூரியன் செங்கடல் எழுகையில் ஆத்தி மாலை அணிசெய் மார்பில் முத்தின் வகையென பூத்திடும் வியர்வையில் முத்துச் சிரிப்பின் முகவரி கண்டு எந்தன் நாயகன் என்னிடம் வந்தான் ’அன...

நாகை தேசிய மேல்நிலைப் பள்ளி

Image
  தேசிய மேல்நிலைப்பள்ளி- நான் பூசிக்கும் கோயிலன்றோ?! கல்விக் கண்திறந்த சான்றோர் நல்லறம் நடத்திய மன்ற மன்றோ?! காலம் தவறாமைக்குத் தமிழாசான் விஸ்வநாதன்(TV) தலைமைப் பண்புக்கு தங்கநிகர் இராமசீனிவாசன்(HM Sir) வேதியல் வித்தகர் வேந்தர்நிகர் இராமசாமி(LR) இயற்பியலின் தந்தை இன்முகமாய் தியாகராஜன்(VT) கணிதப் புலியன்றோ?! கம்பீர விஜயராஜ்(RVR) கலைஇலக்கியப் பேரொளி கடமைதவறா பத்மா அம்மையார்  அன்னை தமிழுக்கு அணிசேர்த்த மாமன்னர் மீனவன் கரைகாணா மாணவர்க்கு கரம் கொடுத்த துவாரகைக் கண்ணன் (RTK) சொந்தப் பிள்ளை போல சொல்லிக் கொடுப்பாரே காந்திமதி தாயார்! எண்ணிலடங்கா வேந்தர்கள் எண்ணங்களில் சிம்மாசனமிட்ட நன்நாகை நகர் பெற்ற பொற்கோயில் அன்றோ எம்பள்ளி! அந்நாளை நினைத்து ஏங்கி அனுதினமும் தேடுகின்றேன் நான்பெற்ற செல்வங்கள் நல்லதொரு கல்விகாண! கொட்டிக் கொடுத்தாலும் கிடைப்பதில்லை கோவேந்தர் கொடுத்த கல்வி! வையத்தில் வாழ்வுதந்த வேந்தே! வணங்க வேண்டும் உம் கால்கள் எங்கே?! கோ. பார்த்தசாரதி

அத்திவரதர்

Image
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஒரு அதிசய நிகழ்வாக அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் இந்த ஆண்டு நிகழ்திருக்கிறது. வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் திருக்குள நீருக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு மட்டும் வழிபடப்பட்டு மீண்டும் திருக்குள நீரில் மூழ்கிவைக்கப்படும் அதிசயம் இப்போது நம் அனைவருக்கும் தெரியவந்திருக்கிறது. மேலும் இந்த அத்திவரதர் அத்திமரத்தால் வடிக்கப்பட்டவர் என்பது கூடுதல் சிறப்பு. இந்த நூற்றாண்டு கடந்த வைபவம் பிரதமர், ஜனாதிபதி தொடங்கி அனைத்து மாநிலத்தவரையும் ஈர்த்து குறுகிய காலத்தில் பெரும் கவனம் பெற்றது நம்மை ஆச்சர்யப்படவைக்கும் அற்புத நிகழ்வே! இதற்குமுன் 1854, 1892, 1937, 1979 ம் ஆண்டுகளில் அத்திவரதர் எழுந்தருளும் வைபவம் நடந்திருக்கிறது. இந்த ஆண்டும் 1-7-2019 முதல் 17-8-2019 வரை நடைபெற்று நிறைவுற்றிருக்கிறது. ஆத்திவரதர் என்னை ஆட்கொண்டு தனது நிறைவு நாளில் ஒரு பாமாலை சூட்ட என் உள்ளத்தில் பணித்ததால் இக்கவிதையை சிரமேற்கொண்டு எழுதிபரவசமுற்றேன். கலியுக வரதனே காஞ்சியின் வரதனோ! தடாகம் பூத்தெழுந்த தாமரை மணாளனோ! வராது வந்த மாமணியே...

நட்பின் இலக்கணம் கண்ணனும் குசேலனும்

Image
ஆரியகுலத்தின் மேவிய செல்வன் நேரிய வழியினன் நேர்மைக் குசேலன் காரியவண்ணன் கருணை வள்ளல் பாரின் வேந்தன் கண்ணனின் நண்பன் சீரிய நட்பின் ஓவிய இலக்கணம் பாரினில் வாழ்ந்திட இருவரும் வாழ்ந்தனர் பாரினை விளக்கும் பகலவன் குலத்தின் பண்பிற் சிறந்த பெரியோர் வாழிடம் தோழர் இருவரும் தொழுதே கற்று நேசக் கரங்களை நெருக்கிப் பிடித்தனர் காலக் குதிரையோ கடிதாய் விரைந்தது கல்விக் கடலின் கரைதனைக் கண்டனர். கருவிழியழவும் கைகள் நெகிழவும் இருவர் மனத்திலும் ஏக்கப் பிரிவுகள் ஆண்டுகள் கடந்ததும் மாண்டன நினைவுகள் அருமைக் கண்ணனோ ஆயர் தம் வேந்தன்! அந்தணன் குசேலனோ நொந்தனன் வாழ்வை ஓட்டைக் குடிசையும் மனைவியும் மக்களும் ஏக்க மனத்தினன் போக்கிடம் அறிந்திலன் கண்ணனைக் கண்டு கனிந்திட எண்ணினான் பொன்னொளி நிகர்த்த புவியின் வேந்தன் வெள்ளைச் சிரிப்பில் முல்லையை வென்றவன் வானவர் வாழ்த்திட வாழும் கண்ணனின் துவாரகா புரிக்கு வந்தான் குசேலன் நோக்கும் இடமெலாம் தேக்கும் வாழையும் வானையும் எட்டும் வைக்கோற் குவியல்கள் அன்புக் கண்ணனின் அரண்மனை தொட்டிட எண்ணி எண்ணி நகர்த்தினான் கால்களை வாயிற் கா...

விண்ணைத் தாண்டிய காதல்- சந்திரயான் -2

Image
இன்று 22 July 2019 நம் நாடு நாம் அனைவரும் பெருமை கொள்ளும் சரித்திர சாதனையாக நிலவுக்கு சந்திரயான் - 2 என்னும் விண்வெளி ஓடத்தை வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. மேலும் அதை நிலவின் பரப்பில் இறக்கி சாதனை படைக்க காத்திருக்கிறது... அதன் பொருட்டு என் வாழ்த்து மடல் இது... இளமதிமேல் மையல் கொண்ட இந்தியரின் தூதுவனாய்- நம் இளவயது கனவுகளை ஏந்தி வரும் மலர்க்கணையாய் ! சோறூட்டும் அன்னை நிலா மடி சேரும் மழலைகளாய் ! விண்ணைத் தாண்டி நம்காதல் வெண்ணிலவைத் தொட்டது இன்று ! அன்னை மடிபோய் விழுந்தாய் விக்ரம்! அந்த நொடி நின்று போனதே இதயம்! சென்று சேர்ந்த உன் தகவல் வருமா? கன்றுகள் கேள்விக்கு என்ன நாங்கள் சொல்ல? ஒன்று மட்டும் உறுதி செய்தாய் நன்று! என்றுமிலா வேட்கையுடன் எமதுமனம் இன்று! அறிவியல் சிறகை விரித்தது நாடு அடிமை மாயைகள் அகன்றதே இன்று! இந்தியச்சாதனைக்கு ஏது எல்லை  ? சந்திரயானுக்கு ஈடு இணை யில்லை! கவிஞர்: கோ.பார்த்தசாரதி

தாமரையின் காதல்

Image
கதிரவனைக் கண்டு தாமரை காதல்கொள்ள, அதைக் கேள்விப்பட்டு தென்றல் ஊரெல்லாம் புரளி பேச, தேனீக்களோ மலர்தோறும் சென்று இந்த கிசுகிசுவைப் பரப்பிவிட ... அதன் பின்னர் இயற்கையில் நடக்கும் பலவற்றை கற்பனையில் வடித்து புனைந்துள்ளேன்.. இக்கவிதை தங்கள் பார்வைக்கு... காலை இளம்பரிதி கண்டு காதலில் மலர்ந்த குமுதம் ஊரார் அறிய அலர்தூற்றி உள்ளம் மகிழும் தென்றல் சோலை நிறைந்த மலர்கள் காதில் கதைசொல்லும் தேனீ பாடி வரவேற்கும் குயில்கள் ஆடல் அரங்கேற்றும் மயில்கள் தாளம் இசைகூட்டும் மந்தி தாவிக் குதித்தோடும் மான்கள் வண்ணம் தீட்டிய வானம் பொன்மஞ்சம் அமைத்த மேகம்! கவிதை பாடிவரும் கரிவண்டு கரம்கோர்த்து ஆடும் மலர்ச்செண்டு மடியில் விழுந்த பனித்துளிகள் மாலையாய் கோர்க்கும் புற்கொடிகள் வளையல் பூட்டிய வானவில் வளைத் தோரணம் அமைத்த கொன்றை வெட்கித் தலைகுனியும் வாழை வெண் நிலவைத் தேடிடுமே அல்லி! மதிமறந்து உறங்கும் மாந்தர் செவி புகுத்து தென்றல் சொல்லும், கழனி பூத்த தாமரைக்கும் காலை எழும் கதிரொளிக்கும் மாலை சூட்டி மகிழ்வதற்கு - நல்ல வேளை ஒன்று வந்தது என்று!  கவிஞர் : கோ.பார்த்தசாரதி ...

மனம் குளிரும் மழை அழகு

Image
அது என் கல்லூரி வாழ்க்கையின் முதலாம் ஆண்டு . 1994 மேல்மருவத்தூர் சூழல் எனக்கு புதுமையானது. வெளியெங்கும் ஆளரவமற்ற தனிமை குடிகொண்டிருக்கும். நண்பர்களை விட்டால் வேறு உலகத் தொடர்பே இருக்காது. நல்ல வேளை அப்போது ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால் தான் எனது கல்லூரி வாழ்க்கை எனக்கு ஏராளமான அன்பு நண்பர்களைப் பெற்றுத் தந்தது... ஒரு முறை ஒரு அழகிய மழைக்காலத்தில் என் கவிஆர்வம் துளிர் விட இந்த கவிதையை எழுதினேன்.. என் நண்பர்கள் வெகுவாக பாராட்டி... மறுநாள் கல்லூரி வகுப்பு நேரத்தில் ஆசிரியரிடம் கூறிவிட்டார்கள். அவரும் ஆர்வமிகுதியில் நண்பனை அனுப்பி விடுதியிலிருந்து எனது கவிதைப் புத்தகத்தை எடுத்துவரச் செய்து வகுப்பறையில் அனைவர் மத்தியில் உரக்கப் படிக்கச் சொன்னார். அப்போது அனைவரது பாராட்டுக்கும் உள்ளானேன். அன்று முதல் நான் நான்கு சுவர்களுக்குள் எழுதிய கவிதைகளை பொதுவெளியில் வெளியிடும் துணிவு கொண்டேன். பிறகு நான் கல்லூரியில் ஒரு கவிஞனாக அறியப்பட்டேன். இக்கவிதை என்னை முழு கவிஞனாக நண்பர்களுக்கு அடையாளப்படுத்திய மறக்க முடியாத கவிதை ... தமிழின் சிறப்புகளில் ஒன்று... ஒரு எழுத்து வார்த்தைக...